Sunday, November 2, 2014

விஜய்யின் புதுப்படம்..! புது தகவல்கள்….!

கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது இப்படம் முழுவதும் ஃபேன்டஸி படம் கிடையாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தின் பெயர் மாரீசன் என்றும் சொல்லப்பட்டது. அதையும் தற்போது மறுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிம்புதேவனின் யூனிட்டைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால்.. புதிய தகவல்கள் சொல்கிறார்கள்.

இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது, பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
ஆனால், ஸ்ரீதேவியும், நான் ஈ புகழ் சுதீப்பும் நடிப்பது உண்மைதான் என்கிறார்கள்.
ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் மட்டும்தான் படத்தில் ஃபேன்டஸியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
முழுப்படமும் விஜய் நடித்த கில்லி படத்தைப்போல் மாஸ் படமாக இருக்குமாம்.

இப்படத்தில் வரும் வில்லன் பாத்திரம், கில்லி படத்தின் பிரகாஷ் ராஜ் கேரக்டர் பேசப்பட்டதைவிட அதிகமாக பேசப்படுமாம். இந்த வேடத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சுதீப்.
பிரகாஷ்ராஜ் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுதீப்பை கமிட் செய்து உள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் உள்ள உத்தண்டியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்றில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Saturday, November 1, 2014

நடிப்பு தவிர நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா எல்லாம் என்ன செய்றாங்க தெரியுமா?

சினிமாவில் மரத்தை சுற்றி டூயட் பாடும் நாயகிகள்… கவர்ச்சி பதுமைகளாய் உலா வரும் நாயகிகள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை பத்திரமாக வேறு தொழில்களில் பயன்படுத்துகின்றனராம். முன்பெல்லாம் அம்மா, அப்பா, கார்டியன் கைகளில் கொடுத்துவிட்டு கடைசியில் நடிகைகள் ஏமாந்து நின்றது ஒருபுறம் நடந்துள்ளது. ஆனால் இன்றைக்கோ பல நாயகிகள் தாங்களின் சம்பளத்தை பாதுகாப்பாக பத்திரமாக முதலீடு செய்துவிடுகின்றனராம். அனுஷ்கா, நயன்தாரா, நமீதா, தேவயாணி என பல நாயகிகள் இதுபோல சைடு பிசினஸ் செய்கின்றனராம். பூர்ணிமா பாக்கியராஜ், சரண்யா பொன்வண்ணன், ஹன்சிகா ஆகிய நடிகைகள் தங்களின் கலைத்திறமையை பயன்படுத்தி புடவை அழகு படுத்துதால், ஓவியம் வரைதல் என உபயோகமான முறையில் பொழுதை கழிக்கின்றனராம்.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார் அனுஷ்கா. ரியல் எஸ்டேட் பிசினஸ்தான் இப்போதைக்கு அனுஷ்காவிற்கு பிரதானமாம்

குட்டித் தீவு ஒன்றை வாங்கி அதை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றியுள்ளாராம் நயன்தாரா. கொச்சியில் அவர் வாங்கியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவு பற்றிதான் இப்போது பரபரப்பான பேச்சாம்.

நமீதாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சம்பாதித்த பணத்தை கொண்டு நிலத்தை வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கிவிட்டார்.

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் அரசியலில் பரபரப்பாக இருந்தார் விந்தியா. இப்போது நமீதா பாணியில் இவரும் ரியல் எஸ்டேட் பிசினசில் இறங்கிவிட்டாராம்.

நடிகை தேவயாணி தன் மகள்களின் பெயரில் டப்பிங் தியேட்டர் கட்டியுள்ளாராம். சீரியல் நடிப்போடு இப்போது இதுவும் நல்ல வருமானம் தருகிறதாம்.

நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், சுதா சந்திரன் ஆகியோர் புடவை டிசைனிங் செய்து விற்பனை செய்கின்றனராம். நடிகை சரண்யா பொன்வண்ணன் காஸ்டியூம் டிசைனிங் வகுப்பு எடுக்கிறாராம்.

அழகு நடிகை ஹன்சிகா 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறார், அதோடு ஓவியம் வரைந்து கண்காட்சியும் நடத்துகிறார். நடிப்பை என் தொழிலாகவும், ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகவும் வைத்து இருக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.