Monday, December 15, 2014

ஐ திருவிழா நாளை ஆரம்பம்! ருசிகர தகவல்


ஐ படம் இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல் தான். ஷங்கரின் பிரமாண்ட திறமை, விக்ரமின் கடின உழைப்பு என படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து யூ-டியுபில் 90 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வரும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரைலர் 2 நிமிடம் ஓடும் என கூறப்படுகிறது. டீசர் சாதனையை ட்ரைலர் முறியடிக்க வாழ்த்துக்கள்.


அஜித் அடுத்த சூப்பர் ஸ்டாரா? மீண்டும் சர்ச்சை கிளப்பிய பத்திரிக்கை


சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு தமிழ் சினிமாவில் என்றும் போட்டி தான். இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இதில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று ரஜினியின் அறிவிக்கப்பட்டத வாரிசு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான், ரஜினியின் அனைத்து நல்ல குண நலன்களும் அவரிடம் உள்ளது.

மேலும் அவரை போலவே நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவரின் ஆரம்பம், வீரம் படமும் ரூ 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. என்று அந்த ஆர்டிகல் முடிகிறது. ஆனால், இந்த பதிப்பு அஜித்தின் எதிர் தரப்பை மிகவும் சீண்டி பார்த்துள்ளது.


‘லிங்கா’ படத்தின் 3 நாள் இமாலய வசூல் – முழு விவரம்!…



‘லிங்கா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், அதெல்லாம் நமக்கு எதற்கு சூப்பர் ஸ்டாரை பார்த்தால் போதும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களுக்கு நிகராக லிங்கா வெளிவந்த மூன்றே நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ரூ 55 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ 25 கோடியும் வசூல் செய்துள்ளது.

மேலும் ஓவர்சிஸில் ரூ 20 கோடியும் ஆக மொத்தம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து மீண்டும் நான் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிருபித்து உள்ளார் சூப்பர் ஸ்டார்.


ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி – நடிகர் விஜய்!

ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி – நடிகர் விஜய்!

பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ‘கத்தி’ திரைப்படத்தின் 50-ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியது: வெற்றி- தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாகச் செய்தால் வெற்றி. கடமைக்காகச் செய்தால் தோல்வி. கத்தி படத்தைப் பொருத்தவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம், அவருடன் இணைந்து நானும் கடமையை மிகவும் சரியாகச் செய்ததால் படம் வெற்றியைத் தந்துள்ளது.

கால்பந்து விளையாட்டில் ஒருவர் கோல் போட வேண்டுமானால், 10 பேரின் உழைப்பும் அவசியம். அதே நேரத்தில் மேலும் 11 பேர் கோல் போடவிடாமல் தடுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி சாதிப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எந்தச் செயலிலும் முயற்சியைவிட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக் கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும். உலகில் நல்லவர்கள் துன்பப்பட்டாலும் அனுபவத்தைக் கற்றுத் தருவார்கள். ஆனால், கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து மறைந்தாலும் அவமானத்தைத் தாங்கிச் செல்வார்கள். அனுபவத்தைத் தருபவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
குடும்பத்தைக் கவனிக்காமல் எனது ரசிகராக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான். கத்தி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஏழை விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கினார். விழாவில் படத் தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆனந்த், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவிராஜா, கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.


Sunday, December 14, 2014

தமிழ் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் ....


தமிழ் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் ....

2014ம் ஆண்டின் நிலவரப்படி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் இது…

நடிகர்கள்

ரஜினிகாந்த் – 25 கோடிக்கு மேல்
சூர்யா – 22-25 கோடி
கமலஹாசன் – 20 – 25 கோடி
அஜீத் – 20-23 கோடி
விஜய் – 19 – 22 கோடி
விக்ரம் – 12-15 கோடி
விஷால் – 6-8 கோடி
ஆர்யா – 5-7 கோடி
தனுஷ்- 5-6 கோடி
சிவகார்த்திகேயன் – 4-6 கோடி
சிம்பு – 4-5 கோடி
ஜெயம்ரவி – 3-5 கோடி
ஜீவா – 3-5 கோடி
விஜய் சேதுபதி – 2-5 கோடி

நடிகைகள்

நயன்தாரா – 2-2.5 கோடி
அனுஷ்கா – 1.5-2 கோடி
இலியானா – 1.5-2 கோடி
ஸ்ருதி ஹாசன் – 1 கோடி
சமந்தா – 80லட்சம் – 1 கோடி
காஜல் அகர்வால் – 60 லட்சம்-70 லட்சம்
தமன்னா – 60 லட்சம் – 80 லட்சம்
ஹன்சிகா – 40 லட்சம்-50 லட்சம்

இந்த விபரமெல்லாம் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், பெற்றுக் கொடுக்கும் ஹீரோக்களின் மானேஜர்கள் ஏரியாவில் திரட்டியவை. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். பெரிய வித்தியாசம் இருக்காது. சில நடிகர்கள் சம்பளத்தை குறைத்து ஏரியா வாங்கிக் கொள்வதுண்டு. உதாரணமாக சூர்யாவும், விஷாலும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு தெலுங்கு ரைட்சை வாங்கிக் கொள்வார்கள்.



Saturday, December 13, 2014

ரஜினி, அஜித்தை முந்திய விஜய் - பிரபல சர்வே

ரஜினி, அஜித்தை முந்திய விஜய் - பிரபல சர்வே

போர்ப்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்திய டாப் 100 பிரபலங்கள் 2014 லிஸ்ட்டை வெளியிட்டது.

இதில் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், எம். எஸ். டோனி மற்றும் அக்ஷய் குமார் முதல் ஐந்து இடத்தில உள்ளனர்.

தென் இந்தியாவை பொறுத்த வரை விஜய் 41வது இடத்திலும் , ரஜினி 45வது மற்றும் அஜித் 51வது இடத்திலும் வகிக்கின்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் தங்கள் நடிகர் தென்னிந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளார் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.


Sunday, November 2, 2014

விஜய்யின் புதுப்படம்..! புது தகவல்கள்….!

கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது இப்படம் முழுவதும் ஃபேன்டஸி படம் கிடையாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தின் பெயர் மாரீசன் என்றும் சொல்லப்பட்டது. அதையும் தற்போது மறுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிம்புதேவனின் யூனிட்டைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால்.. புதிய தகவல்கள் சொல்கிறார்கள்.

இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது, பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
ஆனால், ஸ்ரீதேவியும், நான் ஈ புகழ் சுதீப்பும் நடிப்பது உண்மைதான் என்கிறார்கள்.
ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் மட்டும்தான் படத்தில் ஃபேன்டஸியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
முழுப்படமும் விஜய் நடித்த கில்லி படத்தைப்போல் மாஸ் படமாக இருக்குமாம்.

இப்படத்தில் வரும் வில்லன் பாத்திரம், கில்லி படத்தின் பிரகாஷ் ராஜ் கேரக்டர் பேசப்பட்டதைவிட அதிகமாக பேசப்படுமாம். இந்த வேடத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சுதீப்.
பிரகாஷ்ராஜ் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுதீப்பை கமிட் செய்து உள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் உள்ள உத்தண்டியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்றில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.